Pages

Tuesday, January 25, 2011

காவலன் விமர்சனம்




ரொம்ப நாளைக்கு பிறகு விஜய் மீண்டும் காதல் கதையில் நடித்துள்ளார் .பஞ்ச  வசனங்கள் இல்லாத ,பில்டப் இல்லாத விஜயை இந்த படத்துல பார்க்கலாம் .
கதை என்னவோ சாதாரணமான காதல் கதை தான் என்றாலும் டைரக்டர் சித்திக் தனது திரைக்கதையால் வித்தியாசமாக எடுத்து இருக்கிறார் .

யாரோ ஒரு பெண் குரல் டைரியில் இருக்கும் எழுத்துக்களை வாசிப்பது போல படம் ஆரம்பமாகிறது .அப்படியே படம் பிளாஷ்பாக்க்ள நடக்குற மாதிரி சொல்லபடுகிறது .அதுல
செம்மநூர் பெரிய மனிதரான ராஜ்கிரண் ஒரு ஊருக்கு தன் நம்பிக்கைதுரோகியை கொலை செய்துவிட்டு திரும்பும்போது வழியில் ஒரு தாய்(நடிகை யமுனா ) பிரசவ வலியால் துடிப்பதை பார்த்து லிப்ட் கொடுத்து காபற்றுகிறார்கள் .பிறகு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது ,தன்னைப்போல் அடிதடியில் இல்லாமல் அமைதியாக இருக்குமாறு வாழ்த்தி அதற்கு பூமிநாதன்னு பேர் வைக்கிறாரு அந்த பெண் ராஜ்கிரனை தன் அண்ணன் போல கருதி அவரை பற்றி எடுத்து சொல்லி தன் குழந்தையை வளர்க்கிறார் .ஆனால் அந்த சிறுவன் துடுக்குத்தனமாக ஆக்ரோசமாக  வளருகிறான் ,இப்படி போகும் கதையில் அந்த பையன் வளர்ந்து பெரியவனா ஆகிறான் அதான் விஜய் .
அவனுடைய  சண்டைகள் அதிகமாக,  அவனை திருத்துவதற்கு விஜயின் தாய் ,தந்தை மற்றும் மாமா அனைவரும் சேர்ந்து முத்துராமலிங்கம் ஐயா (ராஜ்கிரண் ) உயிர்க்கு ஆபத்து என்று சொல்லி நாடகம் ஆடுவதை உண்மை என நம்பி விஜய் அவருக்கு பாடிகார்டாக போகிறார் .
ஆனால் ராஜ்கிரண் விஜயை பாடிகார்டாக சேர்க்கவில்லை ,பிறகு விஜயின் அப்பா எழுதிய கடிதத்தை கண்ட பிறகு பாடிகார்டாக சேர்த்து கொள்கிறார் ஆனால் அவருக்கு அல்ல , அவரின் மகள் மீரா (அசின் ) மற்றும் அவர் தோழி மித்ராவுக்கு பாடிகார்டாக அவரும் கல்லூரியில் சேர்ந்து செல்கிறார் .அங்கே கல்லூரியில் விஜய் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் அசின் சுதந்திரமாக இருக்கமுடியவில்லை .எனவே விஜயை தன் வழிக்கு மாற்ற அவர் நண்பர்களிடம் ஐடியா கேட்கிறார் ,விஜயை யாராவது ஒரு பெண் காதலிக்குமாறு ஒரு நண்பன் ஐடியா சொல்கிறான் .ஒரு சந்தர்பத்தில் விஜயிடம் இருந்து தப்பிக்க அசினே காதலியாக விஜய்க்கு பிரைவேட் நம்பரிலிருந்து பேசுகிறார் .

முதலில் நேசிக்காத விஜய் போகப்போக அந்த போன் காதலியை காதலிக்க  தொடங்குகிறார் விளையாட்டாக அசின் தொடங்கினாலும் விஜயின் குணங்கள் மற்றும் காதலை கண்டு உண்மையாகவே விஜயை காதலிக்க தொடங்குகிறார் .ஒரு கட்டத்தில் விஜயும் போன் காதலியான அசினும் ஊரை விட்டு ஓட முடிவு செய்து கிளம்பும் போது ,ராஜ்கிரணுக்கு விஜயும் அசினும் ஊரை விட்டு ஓடுவதாக தகவல் வரவே அவர் தன் ஆட்களை அனுப்பி விஜயை கொள்ள சொல்கிறார் , சண்டைகளுக்கு பிறகு ராஜ்கிரண் விஜயை கொள்ளும் நேரத்தில் அசின், விஜய் காதலிப்பது வேறு ஒரு பெண், அந்த பெண் அவருக்காக ரயில்நிலையத்தில் காத்திருக்கிறார் என்று சொல்கிறார் ,இதை  நம்பும் ராஜ்கிரண் விஜயை அனுப்புகிறார் ,அசின் சொல்லியது உண்மையா என்று அறிய விஜயை பின்தொடர்ந்து செல்ல ஒரு ஆளை அனுப்புகிறார் ,ரயில் நிலையத்தில் அந்த பெண் இல்லை என்றால் விஜயை கொன்றுவிடு என்கிறார்
அந்த பெண் ரயில் நிலையத்தில் இருந்தாளா ?விஜய் என்ன ஆனார் ?அசின் என்ன ஆனார் ? டைரியை படித்தது யார் ? என்பதை திருப்பங்களுடன் சொல்லும் படம் தான் காவலன் .
இது மிகச்சிறந்த படம்னு சொல்லமுடியாது ஆனால் குடும்பத்துடன் பார்த்து மகிழும்   காமடியான காதல் படம் .

பஞ்ச் டயலாக் ,பில்டுப்னு ரூட் மாறி போய்ட்டு இருந்த விஜைய்க்கு தொடர்ச்சியான தோல்விகள் கற்று கொடுத்திருக்கும் பாடம் நன்றாக தெரிகிறது .ஒரு அமைதியான விஜயை சமீபத்தில் வந்த எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது .அதுவும் கொஞ்சம் வெயிட் போட்டு மீசை அழகா வச்சி பார்க்க நல்லா இருக்கார் .விஜய்கிட்ட நடிப்பு திறமைகள் இருப்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் .அதுவும் பார்க்குல காதலிகிட்ட பேசற மாதிரி பேசுறன்னு அசின் கிட்ட பேசற இடம் ,பேசிட்டு போகும்போது பதட்டத்துல  இடறி விழுகிற இடம் ,எனக்கும் சேர்த்து வேண்டிக்கங்கனு சொல்லற இடம் ,முற்பகுதியில வடிவேலோட காமெடி பண்ணும் இடம்னு நெறைய ஸ்கோர்  பண்ணியிருக்கார் .விஜய் இது போல மாறுபட்ட கதைகளில் தான் உங்களை  எதிர்பார்கிறோம் .அதுவும் இந்த படத்துல விஜய் முகத்துல நெறைய எக்ஸ்ப்ரஷன் கண்பிச்சிருக்கார் .
அசினுக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு .பிற்பகுதியில் நடிப்பில் நிறைய ஸ்கோர்  பண்ணியிருக்கார் .அதுவும் பார்க்ல விஜய் பேசிட்டு போனபிறகு தன் தோளை முத்தம் செய்து அழும் இடம் நல்ல நடிப்பு .கொஞ்சம் முதுமை அசின் முகத்துல தெரியுது மத்தபடி ஓகே .
அசின் தோழியா வரும் மித்ரா கதையின் திருப்பத்திற்கு பயன்படுகிறார் .வடிவேலுவின் நகைச்சுவை படத்தோட சேர்ந்து வந்து சிரிக்க வைக்கிறது .
பிற்பகுதியில் பின்னணி இசையில் வித்யாசாகர் கலக்கி இருக்கார் ."யாரது யாரது " அருமையான மெலோடி பாடல் ,பட்டாம்பூச்சி மற்றும் சட சட சாங் குட்
சித்திக் நன்றாக டைரக்ட் பண்ணி இருக்கார் ,சில இடங்களில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் நகைச்சுவையால் அந்த குறையை போக்கிவிடுகிறார் குடும்பத்தோட பார்க்க நல்ல படத்தை கொடுத்ததற்காக அவருக்கு ஒரு சபாஷ் .
மொத்தத்தில் காவலன் குடும்பத்துடன் பார்க்ககூடிய அருமையான பாடம்.