Pages

Monday, March 28, 2011

பரிட்சியமில்லா குட்டி தேவதை


நேற்று(27-03-2011) PVR cinemasla சிங்கம் புலி படத்திற்கு என் ரூம் நண்பர்களுடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தேன்.படம் ஒரு 10.15 PM  மணிக்கு தொடங்கியது.நான் N வரிசையில் உள்ள 10 ம் எண் இருக்கையில் அமர்ந்தேன்.அது அந்த வரிசையில் முதல் இருக்கை ஆகும் ,என் இருக்கையின் இடதுபுறத்தில் உள்ள இருக்கைகளில் என் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.என் வலதுபுறம் நடப்பதற்காக நீண்ட இடைவெளி அதற்கு அடுத்து வரிசையாக இருக்கைகள்.


படம் அரம்பித்தவுடன் ஒரு கணவன் ,மனைவி,மற்றும் 3 வயதுடைய அவர்களின் குழந்தை என மூவரும் என் வலதுபுறத்தில் உள்ள இடைவெளிக்கு அடுத்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.வந்ததிலிருந்தே அந்த குழந்தை அடம் செய்து கொண்டே இருந்தது.பிறகு அதன் தாய் அதை கஷ்டபட்டு சமாதானம் செய்து சிறிது நேரம் நிம்மதியாக படம் பார்த்தனர்.


சிறிது நேரம் கழித்து அந்த குட்டி பாப்பா அவர்கள் மடியிலிருந்து கீழே இறங்கி விளையாட ஆரம்பித்தது.என்ன நினைத்ததோ தெரியவில்லை, என் இருக்கையின் அருகே வந்தது, நான் அதை பார்த்து ஒரு புன்னகை செய்து கை கொடுத்தேன்,அந்த பாப்பாவும் கை கொடுத்து விட்டு சென்றது.பிறகு அடிக்கடி வந்து என்னிடம் கை கொடுத்து விட்டு சென்றது.அந்த முழு வெளிச்சம் இல்லாத அந்த இருட்டில் சரியாக முகம் தெரியாத அந்த குழந்தை ஒவ்வொரு முறை வந்து கை கொடுத்து விட்டு சென்றது ஏதோ ஒருவித சந்தோஷத்தை தந்தது.எனக்கு படம் பார்ப்பதை விட அந்த குழந்தையின் செயல்களை வேடிக்கை பார்ப்பதையே செய்து கொண்டிருந்தேன்.இடைவேளைக்கு சிறிது நேரம் முன்னால் அந்த குழந்தையை அவங்க அம்மா தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்கள்.உடனே அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது ,அவர்கள் சமாதானம் படுத்தியும் அது அடங்கவில்லை.எனவே அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த அம்மா அப்பா இருவரும் சும்மா வெளியே சென்றார்கள் .எனவே என்னால் அந்த குழந்தையின் முகத்தினை இடைவேளையின் போதும் சரியாக பார்க்க முடியவில்லை .இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்து அமர்ந்தார்கள் .இப்பொழுது சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த வாண்டு ,பிறகு மீண்டும் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்து என்னிடம் வந்து மீண்டும் ஒரு புன்னகை ஒரு கை குலுக்கல் செய்து விட்டு சென்றது. 


பிறகு அந்த சின்ன குழந்தை ஒவ்வொரு படிகளை ஏறி இறங்கியது,இதை பார்த்த அதன் அம்மா குழந்தை விழுந்து விடுமோ என்ற கவலையில் அதன் கையை பிடித்துக்கொண்டு அந்த நடக்க உள்ள இடைவெளியில் கடைசி வரிசை முதல் ,முதல் வரிசை வரை அழைத்து சென்றார்கள் ,இப்படியாக ஒரு ஐந்து முறை நடந்தபின்னும் அந்த குழந்தைக்கு எந்த களைப்பும் இல்லை ஆனால் அந்த அம்மா மற்ற பார்வையாளர்களை கருத்தில் கொண்டு குழந்தையை தூக்கிகொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார் .ஆனால் நம்ம குட்டி தேவதை சும்மா இருப்பங்களா மீண்டும் அடம் சரியென்று அவர்கள் குழந்தையை கீழே இறக்கி விட்டார்கள் .  


நம்ம பாப்பா மீண்டும் என்னிடம் வந்து ஒரு புன்னகை செய்து கைகொடுத்து விட்டு சென்று மீண்டும் தன் நடைபயணத்தை தொடர்ந்தாங்க.அப்போ அவங்க பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன விளையாட்டு அப்புறம் லேசா கத்த ஆரம்பிச்சாங்க ,உடனே அவங்க அம்மா மீண்டும் நம் தேவதையுடன் நடந்துகொண்டே படம் பார்த்தாங்க .ஒருமுறை நடந்துகொண்டே என் இருக்கையின் அருகே வரும்போது ,நான் அந்த குழந்தையிடம் நடந்துகொண்டே இருக்கீங்களே உங்களுக்கு கால் வலிக்கலீயா போய் உட்காருங்க அப்படீன்னு சொன்னதும் ,ஹுஹூம் அப்படீன்னு இன்னும் என்னென்னவோ தன் மழலை மொழியில் பேசியபடியே தன் நடையை தொடர்ந்தாள் .கடைசியில் படம் முடிந்த பின் அந்த குழந்தைக்கு ஒரு ஹாய் மற்றும் bye சொல்லநினைதிருந்தேன்,ஆனால் படம் முடிந்தபோது அந்த குழந்தை அவளின் அம்மாவுடன் அந்த அரங்கத்தின் அடுத்த ஓரமாக நடந்து கொண்டிருந்தாங்க .என் நண்பர்கள் கிளம்ப நிர்பந்தித்ததால் வேறு வழியின்றி அந்த குட்டி தேவதையினை பார்த்துக்கொண்டே அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன்.


கடவுள் எவ்வளவு அற்புதமானவர் ,நம்ம வாழ்க்கையில் கஷ்டத்தையும் கொடுத்து அதுக்கான மருந்தையும் தருகிறார் ,நாம் தான் சரியான மருந்தை தேர்வு செய்வதில்லை .நெறையபேர் நினைச்சிருக்கலாம் படம் பார்க்க ஏன் குழந்தையை இரவு காட்சிக்கு கூப்பிட்டு வந்து நம்ம உயிரை வங்கராங்கனு,ஆனால் இன்று நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த மாதிரியான சுகமான தடைகள் தடைகளே அல்ல .அந்த குழந்தையின் அம்மாவிற்கும் இது தோன்றியிருக்கலாம் ச்சே ஏன்தான் குழந்தையை கூப்பிட்டு வந்தோமோ என்று ,ஆனால் அந்த அம்மாவே நினைத்தாலும் இதுபோன்ற ஒரு நடைபயண அனுபவத்தினை எப்போதும் அனுபவிக்க முடியாது அந்த அறிய சந்தர்பத்தினை ஏற்படுத்திய அந்த சின்ன தேவதை , சக மனிதர்களை கண்டு பொறாமைபடும் இந்த உலகத்திலே அடே முட்டாள்களே மனிதர்களை நேசியுங்கள் என்று சொல்லும் ஒரே உள்ளம் இந்த கள்ளமற்ற குழந்தைகள் தான்.எனக்கு முன்பின் தெரியாத அந்த குட்டி தேவதை என்னிடம் வந்து தன் பிஞ்சு கரங்களை நீட்டி ஒரு மழலை சிரிப்பு சிரித்தபோது என் உள்ளத்தில் இருந்து எழுந்து என் உதட்டில் உதிர்ந்த அந்த புன்னகையில் என் மனம் இளகிப்போனதை அறிந்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .தெரியாது மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா என்று ஆனால் என்றும் என் நினைவுகளில் நிழலாடும் ,மனிதர்களை நேசியுங்கள் ,குறைந்தது குழந்தைகளை நேசியுங்கள் ,வாழ்க்கையின் அர்த்தம் புலப்படும் .

Thursday, March 24, 2011

ஒரே ஒருமுறை

அழகான ரம்மியமான மாலைப்பொழுது ,கதிரவனின் கதிர்கள் மேற்கு திசையில் மறைந்து , சந்திரனின் குளுமை பரவ தொடங்கும் நேரம் அது, மாலையின் முடிவிற்கும் இரவின் தொடக்கத்திற்கும் சில மணித்துளிகளே உள்ள அந்த இனிமையான நேரம் ,சென்னை மாநகரின் வெளிப்புறத்தே உள்ள
ஒரு அமைதியான பகுதியில் ஒரு பணக்கார வீட்டு அம்மா பெயர் இலட்சுமி தன் அழகிய மூன்று வயது குழந்தை ஸ்ருதியுடன் சந்தோசமாக கொஞ்சி கொஞ்சி விளையாடிக்கொண்டிருகிறாள்.

அம்முகுட்டி ,என் செல்லம் ,என் பட்டுல்ல இங்க வாம்மா என்று கொஞ்சியபடியே தன் குழந்தைக்கு ஏதோ உணவினை ஊட்டிக்கொண்டிருந்தாள்.ஹ்ம்ம் வேணாம் போ ,போ என்று தன் மழலை குரலில் சுருதி அடம்பிடித்தாள்.

இப்படியாக அம்மாவும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.தன் மகளிடம் விளையாடியபடியே தன் வீட்டு வெளியே பார்த்தாள்,
அங்கு யாரோ ஒரு இளம் பெண் தங்களையே கவனித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள்.பிறகு தன் குழந்தையுடன் விளையாட்டினை தொடர்ந்தாள்.

ஒரு அரை மணிநேரம் கழித்து மீண்டும் பார்க்கும் போதும் அந்த பெண் அங்கேயே நின்றிருப்பதை கவனித்தாள்.ஹேய் ஹேய் போ போ இங்கெல்லாம் நிற்காதே போ போ என்று அந்த பெண்ணை மடியிலிருந்தபடியே விரட்டினாள் இலட்சுமி.இதை எதிர்பார்க்காத அந்த இளம் பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அந்த இளம் பெண்ணிற்கு ஒரு 16 வயது இருக்கும் பார்க்க அழகாக ஆனால் ஏழ்மையாக இருந்தாள்.


அன்று இரவு முடிந்தது ,மறுநாள் மீண்டும் அதே அந்தி வேளையில் இலட்சுமியும் ஸ்ருதியும் விளையாடிக்கொண்டிருந்தர்கள் இப்போதும் அதே பெண் அதே இடத்தில் நின்று கொண்டு இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .இதை கவனித்த இலட்சுமி சற்று கடினமான குரலில் ஹேய் ஹேய் யார் நீ என்ன வேணும் இப்போ போறியா இல்லயா என்றாள்.

பயந்து போன அந்த இளம்பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அன்று இரவு படுப்பதற்கு முன் இலட்சுமி அவள் கணவன் ஆனந்திடம் பேசினாள்.

என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ,டெய்லி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வெளியில இருந்து என்னையும் நம்ம குழந்தயையுமே பார்த்து கொண்டிருக்கிறாள்.இன்னைக்கு நான் அதட்டின உடனே அவ போய்ட்டா,எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

ஆமாம் இலட்சுமி கொஞ்சம் ஜாக்கரதையா இரு, இப்போ தான் போன மாசம் கோயம்பத்தூர்ல ஒரு சின்ன பொண்ணையும் அவ தம்பியையும் கடத்தி கொன்னுட்டாங்க பாவிங்க .யாருக்கு தெரியும் இந்த பொண்ண எதாவது கூட்டம் வேவு பார்க்க அனுப்பி இருக்கலாம்.

அய்யய்யோ ! இப்படியெல்லாம் கூட நடக்குமா ?எனக்கு இன்னும் பயமா இருக்கு.

பயப்படாத நாளைக்கு அந்த பொண்ணு வந்தா போலிசுக்கு போன் பண்ணிட்டு அந்த பொண்ண நகராத மாதிரி நம்மகொழந்தையோட எதாவது விளையாடு மற்றதை போலீஸ் பாத்துக்குவாங்க.

சரீங்க.

மறுநாள் அதே நேரம் இலட்சுமி தன் குழந்தையோட விளையாடிகொண்டே அந்த பெண்ணின் வருகைக்காக காத்திருந்தாள் .அந்த பெண்ணும் வந்தாள்,அவள் இவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தாள் .உடனே இலட்சுமி அவளுக்கு தெரியாமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் இரண்டு போலீஸ் அந்த பெண் அருகே வந்து , ஹேய் ஹேய் பொண்ணு யாரு நீ ? உனக்கு என்ன வேணும் ?

சார் சார் ஒன்னும் இல்ல சார் சும்மாதான் என்றாள் அமுதா(அந்த இளம் பெண்ணின் பெயர்) .

ஒன்னும் இல்லனா இங்க என்ன வேடிக்கை, என்ன எதாவது திருட வந்திருகிறாயா?
இப்படி கேட்டுக்கொண்டிருக்கும் போதே இலட்சுமி தன் குழந்தையுடன் கீழே இறங்கிவந்து அவர்கள் அருகே நின்றாள்.

சார் ஆமா சார் இந்த பொண்ணு மூணு நாளா இப்படித்தான் இங்க வந்து போகுது ரெண்டு நாளா நான் அதட்டியும் இன்னிக்கும் வந்திருக்குது அதான் உங்களுக்கு போன் பண்ணேன் .

ஹேய் சொல்லு யார் நீ யார் உன்ன இங்க அனுப்புனது என்று சற்று கோபமாக கேட்டார் ஏட்டு.

சார் அவங்க சொல்றது உண்மதான் மூணு நாளைக்கு முன்னால நான் கோவிலுக்கு போய்ட்டு இந்த பக்கமா வரும்போது இவங்களும் அவங்க குழந்தையும் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த அழகில் அப்படியே என்னை மறந்து ரசித்தேன். ஆமாம் சார் நான் பொறந்த உடனே என் அம்மா என்ன பக்கத்துக்கு தெருவுல இருக்குற அனாதை ஆசிரம வாசல்ல யாருக்கும் தெரியாம போட்டுட்டு போய்ட்டாங்க ,அப்புறம் என்னை அந்த ஆசிரமத்துல தான் வளர்த்தாங்க.

எல்லா பிள்ளைகள் போல என்னையும் வளர்த்ததால என்னால் ஒரு தாயின் தாலாட்டை அனுபவிக்க முடியல எப்படியோ வளர்ந்துட்டேன் இப்போ நான் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கிறேன் .இவங்க அவங்க கொழந்தையை கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்த்தவுடனே முகமே தெரியாத என் அம்மா ஞாபகம் வந்தது அதான் டெய்லி இங்க வந்தேன்.என்ன என்னை பார்க்க ஒரு ஏழை போல இருப்பதால் அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும் ,என்ன பண்றது சார் ஏழை என்றாலே பணக்காரர்களுக்கும் ,சட்டத்திற்கும் ஒரு மாதிரி தான் இருக்கிறது .இது ஏழைகளின் விதி.

ஹேய் இங்க பாரும்மா மன்னிச்சிடும்மா நான் உன்ன தப்பா நினைச்சு போலிசுக்கு போன் பண்ணிட்டேன் .மன்னிச்சிடும்மா -இது இலட்சுமி .

பரவால்லைங்க எனக்கு இது பழக்கம் ஆய்டுச்சு.

சார் நீங்க போகலாம் சார் உங்களுக்கு நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று போலீசிடம் சொன்னாள் இலட்சுமி .

சாரி கொழந்த மன்னிச்சுடும்மா ,அப்போ நாங்க வரோம் மேடம் .

இலட்சுமி அந்த அமுதாவிடம் , அமுதா வாம்மா உள்ள போய் பேசலாம் என்றாள் .

இல்லைங்க நான் இன்னொருநாள் வரேன் இப்போ என்னக்கு நேரம் ஆச்சு ,
அப்புறம் அப்புறம் என்று அமுதா தயங்கினாள்.இதை கவனித்த இலட்சுமி
என்ன அமுதா அன்ன ஆச்சு ?

இல்லைங்க நான் ஒன்னு கேட்பேன் தப்பா நெனைக்க மாட்டீங்களே ?

என்னமா கேளு நான் தப்பா நெனைக்கமாட்டேன்.

இல்ல நான் உங்கள ஒரே ஒருமுறை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து அம்மா அப்படின்னு கூப்பிட ஆசை .

ஹேய் அமுதா அதுக்கு என்னமா தயக்கம் ,வாம்மா வா என்று கட்டி அணைத்தாள்.

அம்மா அம்மா என்று அமுதா இலட்சுமியை அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.இலட்சுமியும் அமுதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் .அமுதா தன்னை அறியாமல் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

இலட்சுமி அவளை அப்படியே தன் தோட்டத்திற்கு அழைத்து சென்று ஒரு மேசையின் மேல் அமர்ந்து தன் அருகே அமுதாவை உட்காரவைத்தாள்.குழந்தை ஸ்ருதியை அருகிலே வைத்துவிட்டு தன் மடியிலே அமுதாவினை படுக்கவைத்து அவள் தலை முடியினை கோதியபடியே அவள் தோளில் தட்டி அவளை சமாதானப்படுத்தினாள்.

அந்த தருணம் இருவருக்குமே ஒரு அழகான உணர்வாக இருந்தது.

அமுதா நீ ஏன் எங்களோடவே இருக்க கூடாது என்றாள் இலட்சுமி.

இல்லம்மா எங்க ஆசிரமத்துல நெறைய குழந்தைங்க இருக்காங்க இன்னைக்கு நீங்க எனக்கு கெடைச்சிடீங்க, ஆனா அவங்களுக்கு ?
என்னோடைய லட்சியம் என்னன்னா நான் நல்ல படிச்சி அந்த ஆசிரமத்துல இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அம்மா மாதிரி நடந்துக்கணும் .

நல்லது அமுதா என்றாள் இலட்சுமி .

அம்மா எனக்கு இன்னொரு விருப்பம் எனக்கு எப்போ உங்க நினைவு வந்தாலும் நான் வந்து உங்களையும் தங்கச்சியையும் பார்க்கணும்னு ஆசை அதுக்கு நீங்க அனுமதிக்கணும்

தாராளமா வா அமுதா, இது உன் வீடு என்றாள் இலட்சுமி .

கண்களில் கண்ணீரோடு விடை பெறுகிறாள் அமுதா ,நடப்பதை புரியாமல் தன் மழலை சிரிப்புடன் பார்க்கிறாள் ஸ்ருதி.

Friday, March 18, 2011

இலையுதிர்கால நிழல்

Illaiudhir Kaala Nizhal- A shade in winter from Arun Gopalan on Vimeo.


வயதானவர்களுக்கு தேவையான அன்பை அழகாக விளக்குகிறது

காதலில் சொதப்புவது எப்படி - குறும்படம்

KADHALIL SODHAPUVADU YEPPADI from Abinandhan Ramanujam on Vimeo.

காமடியான கதை

மிட்டாய் வீடு - குறும்படம்

MITTAI VEEDU from Abinandhan Ramanujam on Vimeo.

அழகான அனுபவம்

எல்லோரும் சொல்லும் பாட்டு

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
இரயில் சிநேகமாய், புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ, எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

படம் : மறுபடியும்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
பாடல் : வாலி
குறிப்பு :
என்ன அருமையான வரிகள் :

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

தபால்காரன் - குறும்படம்

அருமையான காட்சிகள், அருமையான கதை

Sunday, March 13, 2011

முதிர்கன்னி

வறுமையினாலும் ,
வரதட்சணை கொடுமையினாலும் ,
தோற்ற பொலிவுகளாலும்,
மலராத மண வாழ்க்கையால் ,
அரும்பிடும் குழந்தைதான் முதிர்கன்னியோ ?

Friday, March 11, 2011

வாழ்க்கை அழகானது





அழகான,அன்பான குடும்பம்,
தாயின் அரவணைப்பு,
தந்தையின் கவனிப்பு,
உடன்பிறந்தவர்களின் பாசங்கள்,
உறவுகளின் நேசங்கள்,
மழலையின் சிரிப்பு,
மழைச்சாரலின் சுகம்,
துன்பத்தில் தூக்கிவிடும் கைகள்,
நண்பனின் அறிவுரைகள்,
சில்லென்ற காற்று,
மெய்மறக்கும் புத்தகங்கள்,
தொலைந்துபோன முகங்கள்,
கண்ணாடியின் பிம்பங்கள்,
இறைவனின் கருணை,
காலையின் பொலிவுகள்,
இரவின் நிசப்தம்,
நிலவின் குளுமை,
தென்றலின் குளுமை,
பனியின் சாரல்,
காலைச்சூரியனின் கதிர்கள்,
வானவில்லின் நிறங்கள்,
ஏழையின் சிரிப்புகள்,
உழைப்பின் வியர்வைகள்,
காதலின் வலிகள்,
பசிக்கும் வயிறுகள்,
சோறூட்டிய கைகள்,
அறிவூட்டிய உள்ளங்கள்,
கரைசேர்த்த ஓடங்கள்,
தனிமையின் இனிமை,
முதுமையின் எளிமை,
தோல்வியின் வடுக்கள்,
கோபத்தின் வெளிப்பாடுகள்,
அலுவலக நண்பர்கள் ,
கல்லூரி நினைவுகள் ,
கோடையின் கானல்நீர்,
பறவைகளின் சங்கீதங்கள்,
பயணங்களின் நினைவுகள்,
பசிநேர உணவுகள்,
கோவில் பிரசாதங்கள்,
அலைகடலின் ஓசைகள்,
ஆழ்கடலின் அமைதி,
குழந்தைபருவ விளையாட்டுகள் ,
வாலிப குறும்புகள் ,
தாய்மைப்பேரின் சந்தோசங்கள் ,
பௌர்ணமி நிலவின் குளுமை,
மூன்றாம்பிறையின் அழகு,
இப்படி இன்னும்பல நம் வாழ்க்கையில்,
வாழ்க்கை அழகானது!வாழ்க்கை வாழ்வதற்கே!

Wednesday, March 9, 2011

கண்ணீர்


என்  சுக  துக்கங்களை   
எனக்கு  காட்சிப்படுத்தும்  காலக்கண்ணாடி  நீ !

துன்பம்  எனும்   மேகங்கள்  சென்று 
இதயம்  எனும்  வானத்தில்  இடி  போல தாக்குவதால் தான்  நீ
கண்ணீர்  எனும் மழையை  பொழிகிறாயோ ?
எனக்கு தெரியவில்லை,   புரியவுமில்லை 
ஆம்   புரிந்திருந்தால்  நான்  ஞானி ஆகி இருப்பேன்

Monday, March 7, 2011

பெண்

கருவில் தோன்றிய பரப்பிரம்மம் 
ஏழு தினங்களில் ஆண் ,பெண் என 
திரிந்து குழந்தையாக பிறக்கிறது 
பிறந்த பெண் குழந்தையானது 
பல பொறுப்புகளை ஏற்று 
மனுவின் உச்சமாக மாறுகிறது 
தாய் எனும் தெய்வம் இல்லையேல் 
மனிதன் மண்ணில் இல்லை
சகோதரி எனும் பந்தம் இல்லையேல்
பாசங்களும் நேசங்களும் கிடைப்பதில்லை 
மனைவி எனும் சொந்தம் இல்லையேல் 
மனிதன் மனிதனாக இருப்பதில்லை 
காதலி எனும் நேசம் இல்லையேல் 
மனிதன் இதயத்துடன் இருப்பதில்லை 
பெண் குழந்தை எனும் தென்றல் இல்லையேல்
மனிதன் வாழ்க்கை சோலையாக இருப்பதில்லை 

இப்படி எத்தனை எத்தனை பரிமாணங்கள் 
அதில்தான் எத்தனை தியாகங்கள் 
பெண்ணே நீ மட்டும் இல்லையேல் 
இவ்வுலகம் இன்று இடுகாடாக இருக்கும்
உன்னைப்போல பாசம் கொண்டவர்கள் யார் ?
உன்னைப்போல ஆளுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல கருணை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல இரக்கம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பொறுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அறிவு கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல சகிப்புத்தன்மை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அமைதி கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல தியாகம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு வனவாசம் சென்றவர்கள் யார்?
உன்னைப்போல சுமப்பவர்கள் யார்?

இன்று எத்தனையோ துறைகளில் ஆண்களுக்கு
நிகராய் வளர்ந்து விட்டாய் பெண்ணே !
ஆனாலும் என் கண்களுக்கு நீ
கருவினை சுமக்கும்போது மனிதர்களை 
சுமந்து நிற்கும் பூமித்தாய் போல உயர்ந்து நிற்கிறாய்!

Friday, March 4, 2011

அம்மா


இந்த புனிதம் இல்லையேல் நாம் இங்கில்லை
நாம் பிறக்கும் முன்னே இவளை
கொடுமைசெய்து கஷ்டபடுத்தி பிறக்கிறோம் !


நாம் அழும்போது நமக்காக அழும் இதயம் அவள்
இதயமில்லா பிள்ளைக்கும் அவள் இதயம் துடிக்கும்!


எனக்காக அழுபவள் அவள் என்னை சுமப்பவள் அவள்
ஊரே என்னை தூற்றினாலும் என்னை போற்றுபவள் அவள்
பல் முலையா வயதில் என் உணவை அறிந்து கொடுத்தவள்
நடை பழகா காலத்தில் என் கை பிடித்து நடை பழக்கியவள்


கால்வயிறு  கஞ்சி மட்டுமே இருப்பினும் தான் உண்ணா
விரதம் இருந்து என் பசி ஆற்றுவாள்- ஏனெனில்
அவள் சொல்வாள் நான் விரதம் இருந்து பெற்றவன் நீ என்று !


இப்படி எத்தனை விரதங்கள், எத்தனை சுமைகள்
எத்தனை வேதனைகள் தங்கினாய் எனக்காக
எனக்கு சோறூட்டிய,தாலாட்டிய கைகள்
எனக்காக தூக்கம் தொலைத்த கண்கள்


நீ படிக்காவிட்டாலும் எனை படிக்க வைக்க
நீ பட்ட வேதனைகள் ,சோதனைகள் நான் அறிவேன்
என் படிப்பிற்காக உன் மாங்கல்யத்தை அடமானம் வைத்தாய்
கவலைபடாதே உன் தியாகத்திற்காக
என் வாழ்க்கையையும் தியாகம் செய்வேன்!