Pages

Tuesday, September 14, 2010

காற்றினிலே பெரும் காற்றினிலே

காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ?

-- இந்த பாடல் "துலாபாரம்(1968)" என்ற படத்தில் இடம் பெற்றது.

ஜேசுதாஸ் அவர்கள் பாடியது,

அருமையான வரிகளை கொண்ட பாடல்.

கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன்.

"ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?" என்ன வரிகள்...

0 comments:

Post a Comment