Pages

Tuesday, May 17, 2011

பௌர்ணமி நிலவே!




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு


உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து 


மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்


எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக


இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது


உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்


பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ 
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக


மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்


தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக




இந்த கவிதை என்வலையுலக தோழி மிதிலா என்பவருடையது ,தாய்மைப்பேரின் அழகியலை மிகவும் கவித்துவமாக எழுதியுள்ளார் .எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் என்றும் நிலைத்திருக்கும்.
அவரின் வலைபூவிற்கு செல்ல http://mithilathewriter.blogspot.com/2010/07/blog-post_07.html

சொல்லப்படாமலே இருக்கட்டும்.....


என்னுயிரே!
உலகில் பெண்களிடம் சொல்லப்படும்
ஆண்களின் காதல் அனைத்தும்
பெண்களால் கொள்ளப்பட்டு
கடைசியில் கல்லறைதான்
காண்கிறது என்றால்...


என் காதல் மாத்திரம்
உன்னிடம் சொல்லப்படாமலே
இருக்கட்டும்.....




- என்  நண்பனின் facebook status லிருந்து எடுத்தது. 

Wednesday, May 11, 2011

இந்தாண்டு கட்-ஆப் எப்படி?


கடந்தாண்டை விட, இந்தாண்டு, மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.


அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில், கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால் கட்-ஆப் உயருமா... உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 


கணிதத்தில் 100 (200க்கு) மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 50 (200க்கு) மதிப்பெண்களை கூட்டி இன்ஜினியரிங் கட்-ஆப் 200க்கு கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில், 484 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியாக நிரப்புவதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் உள்ளன. 




விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் இடங்கள் கிடைக்கும் என்றாலும், விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடத்தை பெறுவது, தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான். இதற்கான கட்-ஆப் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது சவால்களை ஏற்படுத்தியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏராளமானோர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாலும், சமமான கட்-ஆப் மதிப்பெண்களையும் பலர் பெற்றுள்ளதாலும் கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு இடங்களை பெற மாணவர்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


தற்போதைய தேர்வு முடிவின்படி, கணிதத்தில் 2,697, இயற்பியலில் 647 மற்றும் வேதியியலில் 1,243 பேர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்தாண்டை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம். எனவே, கட்-ஆப் கணக்கிடப்படும் இந்த பாடங்களில் சதம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க இந்தாண்டு கடுமையான போட்டி தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.


இதுகுறித்து ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறன் அதிகரித்தே வருகிறது. அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. இது கட்-ஆப் மதிப்பெண்ணை உயர்த்தி விடுகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இன்ஜினியரிங் கட்-ஆப் 1 - 2 மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.


கடந்தாண்டு 195 கட்-ஆப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைத்த இடம், இப்போது 196 கட்-ஆப் எடுத்திருந்தால் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையின்படி, தர மதிப்பீடு பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 60 இடங்களை அதிகரித்து கொள்ளும் வாய்ப்புள்ளதால், மொத்தம் 9,000 இடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், முக்கிய கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் இம்முறை பெரியளவில் மாற்றம் இருக்காது" என்று கூறினார்.


கடந்தாண்டு கட்-ஆப் 195 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 5,651. இந்தாண்டு இந்த எண்ணிக்கையில் 1,879 உயர்ந்து, 7,530 பேர் இந்த மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். இந்தாண்டு 197க்கும் மேல் 4,294 பேர் எடுத்துள்ளனர். 197 மதிப்பெண் எடுத்த மாணவர்களே இம்முறை "டாப்" இன்ஜினியரிங் கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய பாடங்களை எடுக்கும் எளிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் 185க்கும் மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை 21,086. இந்தாண்டு இந்த எண்ணிக்கை 24,128 ஆக உயர்ந்து விட்டது. இந்தாண்டு கணித பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 13,383. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 9,903 ஆக இருந்தது. 


இந்தாண்டு இயற்பியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 9,128. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 6,910 ஆக இருந்தது. இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,414. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 8,732 ஆக இருந்தது. தமிழ் வழி இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் இடம்பெற வாய்ப்புண்டு. கடந்தாண்டு தமிழ் வழி இன்ஜினியரிங் படிப்பில் 180 கட்-ஆப் மதிப்பெண்ணுக்குக் கூட, அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தற்போது மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில், தங்களுக்கு கிடைக்கக்கூடிய கல்லூரி மற்றும் படிப்புகளின் பட்டியலை, இப்போதே தயார் செய்து கொள்ளவது கவுன்சிலிங் சமயத்தில் உதவும்.


மருத்துவ கட்-ஆப் எப்படி?


உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியலில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கீழ்கண்ட உத்தேச பட்டியல் அடிப்படையில் கட்-ஆப் பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பு பெறும் வாய்ப்புள்ளது. கடந்தாண்டை விட அதிகபட்சமாக 2 கட்-ஆப் மதிப்பெண் இம்முறை உயர்ந்துள்ளது.


இந்த ஆண்டில் கூடுதல் இடங்களுக்காக (250 இடங்கள்) சில மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகள் கூடுதல் இடங்கள் பெறும்பட்சத்தில் அதிகபட்ச கட்-ஆப் உயர்வு கொஞ்சம் தளர்ந்து 0.5 முதல் 1 வரை மட்டுமே கட்-ஆப் உயர்வு இருக்கும். இது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஆறுதலான செய்தி.


-- நன்றி தினமலர்

Wednesday, May 4, 2011

நீயா நானாவில் - உங்களுக்கு பிடித்த உணவு என்ன?










போன வரம் நீயா நானாவில் ஒரு அருமையான விவாதம் (நான் முழுசா பாக்கல,அது வேற விஷயம் ) நாம் விரும்பும் உணவு வகைகள் பற்றி பேசிகொண்டிருந்தார்கள்.அதுல கோபிநாத் ஒரு கேள்வி கேட்டார் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று ,நெறைய பதில் வந்தது .நெறைய பேர் மீன் குழம்பு பிடிக்கும்னு சொன்னங்க அதுவும் இரவுல மீன் கொழம்ப வைத்து அதை காலையில பழைய சாதத்திற்கு சேர்த்து சாப்டா அந்த ருசியே தனி அப்படின்னு நெறைய பேர் சொன்னங்க.


ச்சே என்ன அருமையான ரசனை நம்ம ஆளுங்களுக்கு.ஆம் நம்ம ஊர்ல நெறைய மக்கள் அதை விரும்புவாங்க.எனக்குத்தான் சின்ன வயசிலிருந்து மீன் என்றாலே ஆகாது அதனால நான் அந்த "நேத்து வச்ச மீன்குழம்பு " அருமைய நான் அறியவில்லை.நமக்கு கத்திரிக்கா இல்ல வெண்டக்க இல்லனா சுண்டக்கா காரக்குழம்ப காலையில பழுதுக்கு சேர்த்து சாப்டா எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம்.அதன் ருசியே தனி எந்த சரவணபவனிலும் கிடைக்காது .


அப்புறம் எனக்கு பிடிச்சத சொல்றேன்-- > நான் எட்டாவது படிக்கறவரை என் பாட்டி(அப்பாவோட அம்மா-நான் எட்டாவது படிக்கும் போது இறந்துட்டாங்க) தயிர் சாதம் பிசைந்து நல்லா கொழகொழன்னு தருவாங்க அதை சாப்பிடவே செம சூப்பரா இருக்கும் அதேபோல கீரைய கடைந்த கல்செட்டியிலேயே கொஞ்சம் சாதம் போட்டு நல்லா கலரி உருண்டை உருண்டைய பிடிச்சி எங்க எல்லாருக்கும் கொடுப்பாங்க ,ச்சே அந்த அருமையான தருணங்கள் மறக்கமுடியாதவை ,அந்த சுவையும் மறக்கமுடியாது.


நான் பத்தாவது படிக்கறவரை எங்க வீட்ல ஹோட்டல் வியாபாரம்தான் அதனால அண்ணன் அப்போஎல்லாம் நல்லா சாப்ட்டு கன்னமெல்லாம் வீங்கி கொழு கொழுன்னு இருந்தேன்.இப்போ நம்ம தனுஷ் போல ஆகிட்டேன்(விடுங்க பாஸ் வாழ்கையில இதெல்லாம் சகஜம்),அப்போ எங்க அப்பா அம்மா செய்ற சாம்பார் சூப்பரா இருக்கும் .இங்க சென்னைல இட்லிக்கு என்ன சாம்பார் செய்றாங்க நாங்க அப்போ எப்படி செய்வோம் தெரியுமா ?நீங்க வேனும்ன ட்ரை பண்ணிபாருங்க.


ஒண்ணுமில்ல தேவைக்கேற்ப காரட் ,கத்திரிக்காய் ,சௌசௌ ,முள்ளங்கி இதஎல்லத்தையும் துவரம் பருப்பு போட்டு(எண்ணெய்,தக்காளி ,வெங்காயம் ,உப்பு ,மிளகாய்த்தூள் எல்லாம் சேர்த்து )கொதிக்க வைத்தபின் அதை நன்றாக வடிகட்டி அதாவது காய்கறி மற்றும் பருப்பினை மட்டும் தனியாகவும் அண்ட் தண்ணீரை தனியாகவும் பிரித்தபின் ,காய்கறி மற்றும் பருப்பினை நன்றாக அரைத்து(கல்சட்டி அல்லது கிரைண்டர் மூலமாக ) பின் அதை அந்த பிரித்த தண்ணீரில் கலந்து மீண்டும் கொதிக்கவைத்து தாளித்து இறக்கினால் சாம்பார் ரெடி.அந்த சாம்பாருக்கும் இட்லிக்கும் என்ன ஒரு டேஸ்ட் தெரியுமா சும்மா இட்லி போய்ட்டே இருக்கும் .இப்பவும் எங்க வீட்ல இந்த சாம்பார் தான் முதன்மை.


அப்புறம் பூரி கிழங்கு ,வடைகறி ,எங்க கடையில செய்ற மெதுவடை ,மசால் வடை ,மிக்சர்,வெங்காய பக்கோடா,வெஜிடபுள் போண்டா ,இப்படி நெறைய பிடிக்கும்.எங்க ஹோட்டெல நாங்க மார்கழி மாதத்துல காலையில மட்டும் டீ கடை வைப்போம் .அப்போ அந்த மார்கழி குளிருல எங்க அப்பா நல்லா பால கயவச்சிட்டு இருப்பாரு நான் ஒரு விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து போனவுடன் அந்த கொதித்த பாலோடு சேர்ந்த பாலின் மீது படர்ந்த ஏடினை தனியே எடுத்து அதில் சர்க்கரைய போட்டு கொடுப்பாங்க சும்மா சூப்பரா இருக்கும் அது.


போதும் போதும் இப்படியே உன் சாப்பாட்டு புராணத்த சொல்லாதேனு நீங்க அழுவறது எனக்கு புரியுது கவலையே வேண்டாம்  இன்னும் சில மட்டும் . 


நம்ம ரசம் சாதத்திற்கு சும்மா வறக்குற  கருவாடுனு சொல்லுவாங்க(பெருசா இருக்கும்பா) அதை வறுத்து ரசம் சாதம் சாப்டா ஹ்ம்ம் ஹ்ம்ம் எவ்ளோ வேணும்னாலும் சாப்டலாம் என்ன அதை வறுத்தால் உங்க தெரு முனைவரை வாசம் வீசும்.அதேபோல ரசத்திற்கு வறுகடலை துவையல் சூப்பரா இருக்கும்.அப்புறம் நம்ம கேழ்வரகு கூழ் செய்து அதை கரைத்து அதுல கொஞ்சம் வேர்கடலை போட்டு அது இல்லனா கொஞ்சம் மாங்காயோ இல்ல வெல்லமோ கடித்து சாப்டா நல்லா இருக்கும்.அதுவும் இந்த கோடையில இதுதான் சிறந்தது .


சரிசரி நாக்குல ஜொள்ளு வழியுது பாருங்க தொடைசிட்டு போய் வேலைய பாருங்க.

Tuesday, May 3, 2011

தெய்வத்திருமகள்




பாரதகதையினிலே தோன்றிய அரவானை 
திருமணம் செய்வதற்காக திருமால் எடுத்த 
மோகினி அவதாரமே உன் பிறப்பிடமோ ?


திருமால் தெய்வம் என்பதால் அவனை வணங்குகின்றனர் 
நீயோ மானிடப்பிறவி என்பதால்தான் வெறுக்கின்றனரோ ?
பாவம் அவர்களுக்கு தெரியாது நீ தான் உயர்ந்தவள் என்று ,
திருநங்கையான நீதான் தெய்வத்திருமகள் என்று!


மனிதர்களை நேசிக்காத இந்த மானிடப்பதர்கள் 
உன்னை எட்டிற்கும், பத்திற்கும் இடைப்பட்ட 
எண்ணை கொண்டு அழைக்கின்றனர் - ஆனால்
அவர்களுக்கே தெரியாது அது கிண்டல் அல்ல உண்மை என்று 
ஆம் நீதான் அஷ்ட லட்சுமிகளோடு சேர்த்து 
வணங்கக்கூடிய ஒன்பதாவது லட்சுமி ஆவாய்!


உன் தோற்றத்தினை பார்த்து ஏளனம் செய்கின்றனர் 
இதில் ஆண்கள் மட்டுமல்ல பல பெண்களும் உன்னை வெறுக்கின்றனர் 
உன்னிலும் பலர் தன் திறமையினை அறியாமல் 
பாலியியல் மற்றும் பிச்சை எடுத்து தங்கள் பெயரினை கெடுத்துக்கொள்கின்றனர்!


நான் உணர்கிறேன் இதற்கு சமூகமும் ஒரு காரணம் என்று,
ஏய் சமுகமே ஊனமுற்றவர்களை ஏற்றுக்கொள்கிறாய் 
ஏன் இந்த திருநங்கைகளை ஏற்க தயங்குகிறாய்!


தயக்கமே வேண்டாம் அவள் வேறுயாருமல்ல நம்முடம் 
நம்மைபோலவே இவ்வுலகினை நேசிக்க பிறந்த தெய்வத்திருமகள் !