Pages

Wednesday, April 27, 2011

மன்னித்துவிடு என் தோழியே



உனை கண்ட நொடிபோழுதினில் இருந்து

ஏதோ ஒரு நினைவலைகள் நெஞ்சில்

படர்ந்து, என் மனதில் நிறைந்து ஒருவித அன்பாகி

முப்பொழுதும் என் கற்பனையில் உனைநினைத்து

உன்பெயரை மட்டுமே வைத்து உனைப்பற்றிய

தகவல்களை நீ அறியாமல் சேகரித்தேன்

நான் உணருகிறேன் இது தவறு என்று,

உன்னிடம் நட்பு கொள்ள நான் ஏங்கிய நாட்கள்

நான் மட்டுமே அறிவேன்!அதிசயமாய் ஒருநாள்

உன்னிடம் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றும்

நான் கேட்ட கேள்விகளுக்கு நீ பதில் சொன்னாயே தவிர

நீயாக எதுவும் கேட்கவில்லை வேண்டாவெறுப்பாக பேசினாய் என்னோடு

பின் நானாக வலியவந்து உன்னிடம் பேசினேன்!

பின் மின்னஞ்சல் கலந்துரையாடல் மூலம் நம் நட்பை வளர்த்தேன்

அப்பொழுதும் நீங்கள் வேண்டாவெறுப்பாக மட்டுமே பேசியதாக

நான் உணர்ந்தேன்! காலம் உங்கள் மீது நான் அளவுகடந்த அன்பு வைத்ததாலோ

என்னவோ? உங்களிடம் பேச வாய்ப்பாக இருக்குமென்று நினைத்து

உங்கள் அலைபேசி எண்ணை கேட்டுவிட்டேன், நானும் உணர்ந்தேன்

அந்த அணுகுமுறை தவறென்று, நீங்களும் தரவில்லை அலைபேசி எண்ணை,

எனக்கு உங்களிடம் பிடித்ததே இந்த அமைதியான குணம்தான்

நானே என்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நான் உன்னிடம்

மன்னிப்பு கேட்டுவிட்டாலும் என் மனதில் ஏனோ ஒரு குற்றஉணர்வு

அதனால் தான் இப்போதும் மன்னிப்பு கேட்க துடிக்கிறது என் மனம்

தயவுசெய்து மன்னித்துவிடு என் தோழியே! நாம் நட்பினை தொடர்ந்திடுவோம் இனியே!

2 comments:

Lali said...

நிறைய பேரோட உணர்வுகள்.. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்! :)

http://karadipommai.blogspot.com/

பிறரிடம் அன்பு செய் said...

மிக்க நன்றி Lali

Post a Comment