Pages

Monday, December 6, 2010

ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பா?

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.


சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நகை கடை உரிமையாளர் கூறியதாவது: ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் வியாபார பொருளாக கருதப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஒரு ஆண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உரிமையாளர் கூறினார்.



நாம் நினைத்தால் ஏன் தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க குரல் கொடுக்க கூடாது?பிரிட்டனில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் திரண்டனரே அதைபோல் ஏன் நம்மால் முடியாது?

இந்த விலை ஏற்றத்தால் நீங்கள் பாதிக்கவில்லை என்றாலும் அப்பாவி ஏழை மக்களின் துயர் துடைக்க குரல் கொடுப்போம் ,கலைஞர் மட்டும் தான் கடிதம் எழுதுவாரோ ,நாம் ஏன் இந்த பிரச்சனைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதக்கூடாது ?எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இது தேவையானு நினைக்காதீங்க ,இதுவும் ஒரு பிரச்சனைதான்!

0 comments:

Post a Comment