Pages

Friday, March 18, 2011

எல்லோரும் சொல்லும் பாட்டு

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
இரயில் சிநேகமாய், புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ, எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

படம் : மறுபடியும்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
பாடல் : வாலி
குறிப்பு :
என்ன அருமையான வரிகள் :

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

0 comments:

Post a Comment